கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை ,அண்ணா காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஸ்வநாத் (வயது 31) இவர் நேற்று கொடைக்கானல் லேக்ரோட்டை சேர்ந்த ராம்குமார் ( வயது 26) என்பவருடன் காரில் ஆர். கோபாலபுரம் -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .காரை ராம்குமார் ஓட்டினார். செடி முத்தூர் பிரிவு அருகே சென்றபோது ...
கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் கார்த்திகேயன் ( வயது 23) பிளம்பர் .இவர் நேற்று தனது நண்பர்களுடன் அங்குள்ள செல்வ சிந்தாமணி குளத்துக்கு குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் ...
கோவை: நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெருவோ, சதுக்கமோ இடம்பெற செய்ய வேண்டும் என ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகின் கவனத்துக்கு கொண்டு வரும் நோக்கத்தில் புலம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து ‘உலக காஷ்மீரி பண்டிட் ...
புதுடெல்லி : மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள ‘முகல் கார்டன்’ அண்மையில்தான் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நம் நாட்டில் உள்ள பழமையான, ...
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் மோதூர் பெத்திக்குட்டை காப்புகாடு வனப்பகுதிக்குள் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது கருப்பராயன் கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்து கிடந்தது. இதனை பார்த்து வன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ,சித்தன் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) டிரைவர். இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள பாறைப்புதுரை சேர்ந்த அஜித்குமார் ( வயது 26)என்பவருடன் பைக்கில் இரும்பொறை – பெத்திக்குட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சோலார் கம்பெனி அருகில் சென்ற போது ...
கோவை போலீஸ் பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு அருகே மாநகர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அடையாளம் காணப்படாத 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவில் இதில் ஒரு வாகனத்தில் திடீரென்று தீப் பிடித்தது. தீ மள, மளவென பரவியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 69 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக ...
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம், தேவராயபுரம், புள்ளாக்கவுண்டன்புதூர், வெள்ளருக்கம்பாளையம், விராளியூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலான விளைநிலங்கள் மலையடி வாரப்பகுதிக்கு அருகில் உள்ளது. இதனால் மலைப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் குப்பேபாளையம் ஆதிநாராயணன் கோவில் அருகே உள்ள ...
மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். இனி கால அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் ...
கோயில்களில் சுவாமி சிலைகள்தான் காணாமல் போய்விட்டதானச் செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கோயில்களே காணாமல் போய்விட்ட தகவலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம், விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரில் மூன்று கோயில்களைக் காணவில்லை என ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் நேற்று காலை சுவாமி தரிசனம் முடித்து ...













