மரத்தில் கார் மோதி வாலிபர் சாவு- டிரைவர் படுகாயம்..!

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை ,அண்ணா காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஸ்வநாத் (வயது 31) இவர் நேற்று கொடைக்கானல் லேக்ரோட்டை சேர்ந்த ராம்குமார் ( வயது 26) என்பவருடன் காரில் ஆர். கோபாலபுரம் -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .காரை ராம்குமார் ஓட்டினார். செடி முத்தூர் பிரிவு அருகே சென்றபோது திடீரென்று கார் நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் விஸ்வநாத் இறந்தார். டிரைவர் ராம்குமார் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீசார் கார் டிரைவர் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.