கோவை போலீஸ் குடியிருப்பில் திடீர் தீ விபத்து- 69 பைக்குகள் எரிந்து நாசம்..!

கோவை போலீஸ் பள்ளி வளாகத்தில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பு அருகே மாநகர போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு அடையாளம் காணப்படாத 1000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரவில் இதில் ஒரு வாகனத்தில் திடீரென்று தீப் பிடித்தது. தீ மள, மளவென பரவியது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த 69 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 100 க்கு மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு பொறுப்பு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.