மின்கம்பத்தில் பைக் மோதி டிரைவர் பரிதாப பலி – வாலிபர் மீது வழக்கு..!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி ,சித்தன் கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) டிரைவர். இவர் நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள பாறைப்புதுரை சேர்ந்த அஜித்குமார் ( வயது 26)என்பவருடன் பைக்கில் இரும்பொறை – பெத்திக்குட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள சோலார் கம்பெனி அருகில் சென்ற போது திடீரென்று பைக் நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் பைக்கில் பின்னால் இருந்த சிவக்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தார் .பைக் ஓட்டி வந்த அஜித்குமார் படுகாயத்துடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து சிவக்குமாரின் மனைவி நித்திய பிரியா சிறுமுகை போலீசில் புகார் செய்தார். போலீசார் பைக் ஓட்டி வந்த அஜித் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..