உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ...
கோவையில் மசாஜ் சென்டர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இது கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து கவர்ச்சிகர அறிவிப்புகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றன. இதை நம்பி வருபவரிடம் அழகிகள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் அவர்களிடம் உல்லாசமாக இருப்பதாகவும் கூறி பணம் பறித்து வருகின்றனர். மசாஜ் சென்டர் நடத்துவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறுவதுடன், போலீசார் மற்றும் ...
கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைகளை தொடர்ந்து கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் கணக்கெடுத்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை 88 க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் ...
தூத்துக்குடி: உலக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றன. நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருச்செந்தூர் கோவிலில் எடுக்கப்படும் ஒப்பந்தமுறை குப்பைகளை கையாள்வது கோவில் நிர்வாகத்தினருக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, பக்தர்களுக்கு குடிநீர் ...
ஈராக்கில் திருமண விழாவின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர். ஈராக்கின் நினிவே மாகாணத்தில் திருமண விழாவின் போது பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நினிவே மாகாணத்தின் ஹம்தானியா மாவட்டத்தில் செவ்வாய்கிழமை இரவு திருமண விழா நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீர் ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து கவுண்டர். இவரது மனைவி கிட்டத்தாள் ( வயது 86) இவர் நேற்று முட்டம் பாளையத்தில் உள்ள பிஏபி வாய்க்காலுக்கு கால் கழுவ சென்றார். .அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.இதுகுறித்து இவரது மகள் அம்சவேணி நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். ...
கோவை புது சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். பெயிண்டர் இவர் கடந்த 22- 3- 20 17 அன்று கோவையிலிருந்து அரசு பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்து சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தார். அன்னூர் அருகே சென்றபோது பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் .அப்போது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். இது ...
கோவை விளாங்குறிச்சியில் உள்ள எஸ். ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 44) தொழிலதிபர் இவரது மனைவி பிந்து ( வயது 40) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். வித்யாசங்கர் திருப்பூரில் சொந்தமாக மில் நடத்தி வந்தார். இங்கு நூல் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தார் .மேலும் அவர் தொழிலை ...
திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று. தரையில் தரதரவென இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றியதால் இரு தரப்பினருக்கும இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் விவசாயிகள் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் ...
கோவை: கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி சார்பில் கூடுதலாக 200 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்க பயன்படும் டயர், இளநீர் ஓடுகள், மூடி வைக்கப்படாத சிமென்ட் தொட்டிகள், ...













