தண்ணீரில் மூழ்கி மூதாட்டி, மாணவன் உயிரிழப்பு..

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து கவுண்டர். இவரது மனைவி கிட்டத்தாள் ( வயது 86) இவர் நேற்று முட்டம் பாளையத்தில் உள்ள பிஏபி வாய்க்காலுக்கு கால் கழுவ சென்றார். .அப்போது திடீரென்று நிலைத்தடுமாறி தண்ணீருக்குள் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.இதுகுறித்து இவரது மகள் அம்சவேணி நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல கோவை, கோவில்பாளையம் பக்கம் உள்ள அக்கரகார சாமக்குளம், காமராஜ் விதியை சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் சித்தார்த் ( வயது 8)அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று பெருமாள் கோவில் குட்டையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து அவனது தந்தை முருகேசன் கோவில் பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.