கோவையில் அதிரடி மின்னல் வேட்டை… 88 ரவுடிகளை தட்டி தூக்கிய போலீசார்.!!

கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு ரவுடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைகளை தொடர்ந்து கோவையில் உள்ள ரவுடிகளை போலீசார் கணக்கெடுத்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை 88 க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட ரவுடிகளின் கூட்டாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை, தூத்துக்குடி,நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகள் நிபந்தனை ஜாமின் அடிப்படையில் கோவை கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட உத்திரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கோவையில் தங்கி உள்ளனர். சில நேரங்களில் வழிப்பறி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களை கண்காணிக்க 4 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது..