சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர பாகுபாடுகளையோ, வேறுபாடுகளையோ உணர்த்த கூடியது அல்ல. என்பதை உணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல என வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாச்சரிய சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டையில் ...

ஆவணி மாத  பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. ஆவணி மாதம்   பிரதோஷத்தை ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட ஆலயம் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே  மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக நாகலிங்க ...

உடுமலை குறிச்சி கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு. சுடலை ஆண்டவர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் கொடை விழா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு அன்னதானமும், 10 மணிக்கு திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும்,மதியம் 12 மணிக்கு கணியான் மகுடம் பாடுதல், ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தோப்பு அணிக்கு மாதந்தோறும் எண்ணப்படும் இந்த மாதம் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் பொது உண்டியல் மூலம் ரூ. 36 லட்சத்து 38 ஆயிரத்து 769 திருப்பணி உண்டியல் மூலம் ரூ ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் வடகரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் தர்மராஜா ஆலயத்தில் ஆடித் திருவிழா ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், கும்பம் படையல் ...

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவையில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர ...

மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி அத்திப்பட்டு கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லாத்தம்மன் ஆலயத்தில் 23-ம் ஆண்டு ஆடித் திருவிழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பால்குடம் எடுத்தல், ...

பவானிசாகரில்,கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. இதனையடுத்து,மாலை 4 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன் கஞ்சிக்கலய ...