வால்பாறையில் முகமது மீரான் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜா அத் ஜுமா மசூதி பள்ளி வாசலில் முகமது மீரானின் ஆண்டு விழாவை முன்னிட்டு ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் தீன் சொற்பொழிவுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் தொடக்க நாளான நேற்று தாலுகா காஜியார் பூக்கோயத் தங்கள் தலைமையில் பள்ளி வாசலில் முத்தவல்லி கமாலூதீன் ஜமாஅத் தலைவர் கே.எம்.குஞ்சாலி முன்னிலையில் கொடியேற்றி வைத்தார். வரும் 27, 28 ஆகிய இரு தினங்களில் தீன் சொற்பொழிவு நடைபெறுவதைத் தொடர்ந்து 29 ஆம் தேதியன்று அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்தை ஆனைமலை முஸ்லிம் சுன்னத் ஜமா அத்தின் கௌரவதலைவர் வால்பாறை வீ.அமீது தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார். வெகு சிறப்பாக நடைபெற உள்ள இவ்விழா ஏற்பாடுகளை பள்ளி வாசல் நிர்வாகிகளும், மதரசா கமிட்டி நிர்வாகிகளும், இளைஞர் கமிட்டி நிர்வாகிகளும் துரிதமாக செய்து வருகின்றனர்..