சென்னை: மண்டலக்குழு தலைவர்கள் விவரம்… சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் விவரத்தை திமுக வெளியிட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், திமுக சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் – ந.இராமலிங்கம், துணை தலைவர்கள் – ஏஆர்பிஎம்.காமராஜ், ...

பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு பணி வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த நாட்டின் தேசிய பேரவையில் இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் ...

சென்னை : டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் 2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் நாளை பிற்பகல் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக ...

திருவள்ளூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ‘பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும், அவர்கள் ஆட்சி காலத்தில் லிட்டர் 6ரூபாய் பால் விலை  இருந்ததாக தெரிவித்தார். தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிப்படி பால் விலையை 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இதனால் ...

சென்னை சென்ட்ரலில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான ரூ.34.22 கோடியில் அழகுபடுத்தப்பட்ட சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடைப்பெற்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து ...

தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொரின் இரண்டாவது அமர்வு மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை என்பரால் 6 முதல் ...

திருப்பூர் மாநகராட்சி 4 வது மண்டல தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருப்பூர் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர் இல பத்மநாதனுக்கு திருப்பூர் வடக்கு மாவட்டம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோ.ஆனந்தன் சார்பாகவும் நாற்பதாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுபத்ரா தேவி ஆனந்தன் சார்பாகவும் வெற்றி மாலை சூடி வீரவாள் கொடுத்து பரிசு கொடுத்து உற்சாக ...

வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதல் முறையாக வங்கிகளில் கடன் பெற்று திரும்ப ...

புதுடெல்லி: அஸ்ஸாம்- மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் முதல்வர்கள் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், கான்ராட் சங்மாவும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் கையெழுத்திட்டனர். வடகிழக்கு மாநிலங்களில் முக்கிய மாநிலமான அசாமுடன் அண்டை மாநிலங்களான, மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகியவை ...

முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம். தமிழகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ...