மே 10-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்-சபாநாயகர் அப்பாவு தகவல்.!!

தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொரின் இரண்டாவது அமர்வு மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக அரசின் துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தை என்பரால் 6 முதல் 10 வரை நடத்த அலுவல் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, 6ம் தேதி நீர்வளத்துறை, 7ம் தேதி நகராட்சி நிர்வாகம், 8ம் தேதி கூட்டுறவுத்துறை என்றும் 11, 12 தேதிகளில் உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.