டெல்லி : சமூக வலைதளங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் வழங்கும் தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனி அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு கமிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுவது ...

அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலூ தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தலைமையேற்று பேசிய எ.வ.வேலு செய்தியாளர்களை ...

சென்னை : ”ஆவினில் நெய் வாங்குவது போல, ஹெல்த் மிக்ஸ் வாங்குவோம். நாளைக்கே தயாரித்து தந்தால் கூட வாங்க தயாராக இருக்கிறோம்,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். ஆவின் நிறுவனம் வாயிலாக, ‘ஹெல்த் மிக்ஸ்’ தயாரிக்கப்பட்டு, வெளியிடுவதற்கான ஏற்பாடு நடந்து வந்தது. கர்ப்பிணியருக்கு வாங்கி வழங்குவது தொடர்பாக, மூன்று முறை ஆவின் ...

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள கர்நாடகா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள தமிழக அரசு, ...

டெல்லி: ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை இரட்டிப்பாக்க இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்குலக நாடுகள், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின்  இன்று (7.6.2022) தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் ...

தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகத்தில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மாணவ, மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும். முதல் 5 நாட்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும். இதில், தன்னார்வலர்கள் மற்றும் போலீசார் என பலரும் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் குறித்து பாடம் எடுப்பார்கள். ...

தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் (கள்ளக்காதலன் என்றும் சொல்லப்படுகிறது) சையது அலி, புரோக்கர் வேலை செய்த மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் ...

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திவரும் சூழலில் பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் மேல் மிச்சமாகியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் விஷயத்தில் நாம் பெரும்பான்மையாக இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பதால் பெருமளவிலான அந்நிய செலாவணி ...

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ...