பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனிடையே, முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி செல்ல முடியவில்லை. குடியரசு ...
சென்னை : அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை டான்சி வழக்கு மூலம் அலற வைத்த ஆர்.எஸ்.பாரதி, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கைக்கும் அக்னிப்பரீட்சை வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கால் ஏற்பட்ட பிரச்சனையால் தான் முதல்வர் பதவி பறிபோனது. அப்போது முதல்வர் ஆனவர் தான் ஓ.பன்னீர்செல்வம். இன்று, ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு ...
சென்னை: பிரதமர் மோடி 2 நாட்கள் பயணம் சென்னை வருவதால் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். ...
தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை சென்ற தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை பரிசோதனைக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ...
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் எம் பி ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடந்திருப்பதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக ...
ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தும், அத்திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவதை நிறுத்தியும் வைத்திருக்கும் தி.மு.க. அரசுக்கு ...
பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான ...
குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். இதையடுத்து, அவரது பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் 15-வது குடியரசுத்தலைவராக ...
டெல்லி: பாஜக மாநிலத் தலைவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பாஜக கட்சி வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 ...
தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக ...













