கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் கூண்டோடு பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இது பாஜகவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மறுபுறம் ஆளுங்கட்சியான திமுகவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இணைந்துள்ள 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் முழு ...
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான தனிப்படை விசாரணைக்கு நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஆஜர் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ...
டெல்லி: நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ஆகஸ்ட் 6ம் தேதியான இன்று குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ...
தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் (வெள்ளை நிற போர்டு) பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளின் நிறத்தை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை ...
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு கி.மீ. கணக்கில் நாடு முழுவதும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சுங்கச் சாவடிகளில் தொடக்கத்தில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் ...
அதிமுக பொதுகுழு வழக்கில் அதிரடி மாற்றம் – வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற தலைமை உத்தரவு..!
அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்றும், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் மனு அளித்தார். ஆனால், ஓபிஎஸ்-ன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொடர்ந்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்புக்கு ...
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார். முல்லை பெரியாறு அணை கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்நிலையில் முல்லைப்பெரியாறு ...
புதுடெல்லி: குஜராத்தின் வல்சாத் மாவட்டம், தரம்பூரை சேர்ந்த ராஜ்சந்திரா அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதன்படி தரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட ராஜ்சந்திரா மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். ராஜ்சந்திரா கால்நடை மருத்துவமனை, மகளிர் திறன் மேம்பாட்டு மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: ...
ஊட்டி: தென்மேற்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அரசுத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ஊட்டி அரசினா் விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக மாற்றுத் திறனாளி நலத் துறை செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்துக்கு தலைமை தாங்கி வனத்துறை அமைச்சா் ...
கோவை: கோவையில் வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும் தனது ஆதரவாளர்களை பெருமளவில் திரட்டிக்காட்டி தனது செல்வாக்கை உணர்த்தும் வகையில் அந்தக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பான முன்னெடுப்பு பணிகளை கோவை செல்வராஜ் மெல்ல ஆரம்பித்திருப்பது கவனிக்கத்தக்கது. ...













