கோவை:திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அதன் மாநகர செயலாளர் நிர்மல் குமார் தலைமையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று ஒரு மனு கொடுத்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-ஓசூரில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பேசிய விஸ்வ இந்து பரிஷத் தமிழக மாநில செயலாளர் சு.வே.ராமன் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எங்கெல்லாம் பெரியார் சிலை உள்ளதோ அவைகள் அனைத்தும் உடைக்கப்படும்.என்று பேசியுள்ளதை கண்டித்தும்,மத உணர்வுகளை தூண்டும் படி பேசியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து,பெரியார் சிலைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply