விடுதலை போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அவரது படத்திற்கு ஈபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்திய விடுதலை வரலாற்றில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 307-ஆவது பிறந்த நாளான இன்று ...

எட்டு வழி சாலை திட்டத்தை திமுக ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பூலிதேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூத்துக்குடி வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ் நிகழ்ச்சியின் ...

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலth தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ (90) உடலநலக் குறைவால் உயிரிழந்திருப்பது, அந்தக் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,சோனியா ...

தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக குறிப்பிட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருந்த நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அரசியலுக்கும் மாநிலத்திற்கும் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மதுரை விமான நிலைய வாயிலில் தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது ...

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலை முன்வைத்து அக்கட்சியின் மூத்த தலைவ சசி தரூர் கூறிவரும் கருத்துகள் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான குழு அமைக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. தற்போதைய ...

சென்னை: மத்திய உள்துறை சார்பில் திருவனந்தபுரத்தில் செப்.3-ம் தேதி நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதையொட்டி, 2-ம் தேதி கேரளா செல்லும் அவர்,கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு உள்ளிட்ட திட்டங்கள் குறித்துபேசுகிறார். மாநிலங்களின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் ...

நாட்டின் முதல் மெய்நிகர் பள்ளியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று  தொடங்கி வைத்தார். பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை நேற்று தொடங்கினார் . தில்லி ...

கோவை காந்திபுரம் 48வது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் ...

தமிழகத்தில் 18 கோயில்களில் 25 புதிய திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. காணொலி வழியாக புதிய பணிகளை அவா் தொடங்கினாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.35 கோடியில் பக்தா்களுக்கான விடுதி, அழகா் ...

ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், ...