திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு புகழ்பெற்ற பெருமாள் கோயில்களில் பரம்பத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் அதிகாலையில் திறக்கப்பட்டது. இதில் பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து சொர்க்க வாசலில் நுழைந்து சாமி தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதையொட்டி ...
புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துள்ளன. தமிழகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள் உள்ளிட்ட இடங்களில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு புத்தாண்டை கோலாகலமாக ...
ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த அவர் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிப்பாட்டு மையத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஒரு பசுவின் ...
நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர். கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ...
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது. 31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் ...
கோவை சவுரிபாளையம் பால தண்டாயுதம் நகரில் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் பூசாரி ...
கோவை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்து மசை வருகிற 25-ந் தேதி கொண்டாட தயாராகி வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஏழைகளுக்கு உதவி செய்வதே இப் பண்டிகையின் நோக்க மாகும். 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு கிறிஸ்து மஸ் கொண்டாட்டம் உற்சாகம் அடைந்து உள்ளது. டிசம்பர் முதல் ...
கோவை நவ இந்தியா பகுதியில் மிஸ் தமிழ்நாடு அழகிபோட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கோவை மற்றும் பொள்ளாச்சியில் இருந்து தலா ஒரு போட்டியாளர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், 16 போட்டியாளர்களும் பார்வையாளர்கள் முன்னிலையில் பாரம்பரிய மற்றும் மேற்கத்திய உடைகள் அணிந்து பூனை நடைபோட்டு தங்களது ...
தும்பினால் கூட செல்போனில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத் துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசிய முதலமைச்சர், பால் விலையை குறைத்ததால் லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளதாகவும், கடந்த ஆட்சியைவிட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை ...
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதனால் இரண்டு ...













