தமிழ்நாட்டில் வரும் 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகளும், 300 பகுதிநேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் 2000க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. . தீப்பெட்டி உற்பத்திக்கு மூலப்பொருட்களாக ...
தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ...
நீதிமன்ற உத்தரவை மதிக்காவிடில் சிறை தண்டனையே பிரதானமாக இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனையே பிரதானமாக இருக்க இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத செயல் என்பது பணியில் நேர்மையுடன் செயல்படாததை காட்டுகிறது என்றும் அரசு பதவியை, லஞ்சம் ...
நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம், இன்று நள்ளிரவு முதல் உயர்கிறது. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சுங்க கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கீழ் உள்ள சாலையின் சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயரும் என, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதன் ...
டெல்லி: இலங்கையில் சீனா செயல்படுத்த இருந்த மின் உற்பத்தி திட்டங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா- இலங்கை இடையே கையெழுத்தானது. பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக்கடல் பகுதி நாடுகளின் கூட்டம் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இலங்கையில் தமிழர்கள் அதிகம் ...
தொடர்ந்து 10 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. ஆயினும் சுமார் 4 மாதங்களுக்கும் மேலாக 5 மாநில சட்டப்பேரவை ...
தமிழகத்தில் இரவு வேலை பார்க்கும் டிராபிக் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-களுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் உத்தரவிட்டுள்ளார். மக்களின் நலன் சார்ந்து அயராது உழைக்கும் காவல் துறையினருக்கு பொதுவாகவே விடுமுறை நாட்கள் என்பது குறைவுதான். அத்துடன் அரசு விடுமுறை, பண்டிகை நாட்கள் என எதற்கும் விடுப்பு வழங்கப்படுவதில்லை. ...
ஏப்ரல் 1ம் தேதி முதல் வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்வு கட்டணம் உயர்கிறது என மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பரனூர், சூரப்பட்டு, சமுத்திரம், நெமிலி, வானகரம் ஆகிய 5 சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிக் கட்கரியிடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு நேரில் ...
திருவள்ளூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், ‘பால் விலை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தூங்கிக் கொண்டே இருப்பதாகவும், அவர்கள் ஆட்சி காலத்தில் லிட்டர் 6ரூபாய் பால் விலை இருந்ததாக தெரிவித்தார். தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிப்படி பால் விலையை 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டார். இதனால் ...
சேலம் : பேப்பர் விலை ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏப். 1 முதல் ‘ஆப்செட் பிரின்டிங்’ பணிகளுக்கு 40 சதவீத கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்ட பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி ...













