கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் சூப்பர்வைசராக ராஜேந்திரன் (வயது 84) என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இந்த குடியிருப்பிற்கு சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோவை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர். ...

மதுரை: நாகர்கோவில் காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நாகர்கோவில் காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் ...

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம்லட்சுமண புரத்தைச் சேர்ந்தவர்சோமசுந்தரம் இவரது மனைவி சரஸ்வதி ( வயது 64)இவரது கணவர் சோமசுந்தரம் 2020 ஆண்டு இறந்துவிட்டார் .இவருக்கு 2மகள்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்கா, லண்டனில் வசித்து வருகிறார்கள்.இதனால் சரஸ்வதி தனியாக வசிக்க விருப்பமில்லாமல் காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.இந்த நிலையில் பாப்பநாயக்கன்பாளையம் ...

கோவை சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று நீலிகோணாம்பாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுதாகரனிடம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் திடீரென அவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.350-யை பறித்து கொண்டு தப்பினார். ...

கோவை துடியலூர் ஜி.என்.மில் பக்கம் உள்ள டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடராஜ் .இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 56) இவர் நேற்று தனியார் டவுன் பஸ்சில் பூ மார்க்கெட் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார் .அங்கு பஸ்ஸை விட்டு இறங்கும் போது இவரது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. யாரோ பஸ்சில் வைத்து திருடிவிட்டனர். ...

கோவை சிட்கோ பிள்ளையார் புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 22). இறைச்சி கடை ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது உறவினர் ஒருவரின் 16 வயது மகன் பீடி புகைத்து கொண்டிருந்தார். இதனை ஆறுமுகம் கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டருகே நின்று இருந்தார். அப்போது அங்கு ...

கோவை நியூசித்தாபுதூர் சின்னசாமி நாயுடு வீதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக நான் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2017-ம் ஆண்டு கோவையை சேர்ந்த கோபி (32) ...

கோவை கள்ளிப்பாளையததை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 22). கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் ஆலாந்துறையை சேர்ந்த மனோஜ், சதிஷ், சபரி. சம்பவத்தன்று நண்பர்கள் 4 பேரும் ஆலாந்துறையில் உள்ள நண்பரின் திருமணத்துக்கு சென்றனர். அங்கு பிரசாந்த், மனோஜ், சதிஷ், சபரி ஆகியோர் மது குடித்தனர். மது தீர்ந்ததால் மீண்டும் மது வாங்க ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு ...

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன்படி, பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி ...