கோவை தொண்டாமுத்தூர்- போளுவாம்பட்டி ரோட்டில் உள்ள ஒருடாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பைசூல் இஸ்லாம் (வயது 21) கைது ...
கோவை: இந்தியாவில் செயல்படும் பிரபல செல்போன் நிறுவனங்கள் தங்களது செல்போன் டவர்களை தனியார் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் மாத வாடகை அடிப்படையில் அமைத்துள்ளனர். இதேபோல், சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம் தனது செல்போன் ...
கோவை: திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இந்தியாஸ். இவரது மகன் முகமத் அப்துல் ரகுமான் (வயது18). இவர் கோவை பீளமேட்டில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அறையில் இருந்த அவரது லேப்டாப், 2 செல்போன்கள் காணாமல் போனது. அதிகாலை அவரது அறைக்குள் நைசாக புகுந்த ...
கோவை கவுண்டம்பாளையம் ,ராம் குட்டிலேஅவுட்டை சேர்ந்தவர் அருண்குமார் ( வயது 38) தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிவானந்தா காலனியில் உள்ள ஒரு பேக்கிரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போதுஇருசக்கர வாகனத்தில் வேகமாகவந்த ஒருவர் பைக் ஹாரனை சத்தமாக எழுப்பினாராம்.இதை அருண்குமார் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அருண்குமாரை,கைகளால் ...
கோவை: சென்னையில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைடுத்து பேரவை தலைவர் அப்பாவு, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதித்து சபாநாயர் அப்பாவு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத ...
சென்னை: சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி அதிமுகவினர் போராட்டம், கைது நடவடிக்கை என்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் காலையில் பெரும் பரபரப்பு ...
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைத்த விதிமுறைகளுக்கு மீறி இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமடைந்திருக்கிறது என்று ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை ...
சென்னை : ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையில் 27 சிசிடிவி கேமிராக்கள் செயல்படாமல் இருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய வீரபெருமாள், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி ஆகியோர் இதுகுறித்து ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வாக்குமூலம் அளித்துள்ளனர். ...
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்த தேதி குறித்து வித்தியாசமான தகவல்கள் கூறப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்த வந்த டாக்டர் ஜெயலலிதாவுக்கு இறுதி அறுவை சிகிச்சை பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது அவர் இறுதி மூச்சு இருக்கும் வரை நடைபெறவில்லை. எய்ம்ஸ் ...
கோவை குனியமுத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள ராயல் நகரை சேர்ந்தவர் பீர்முகமது ( வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் நள்ளிரவில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்து பீர் முகமது குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு ...













