கல்லூரி மாணவரின் லேப்டாப், செல்போன் திருட்டு- மர்ம நபருக்கு வலை ..!

கோவை:
திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இந்தியாஸ். இவரது மகன் முகமத் அப்துல் ரகுமான் (வயது18). இவர் கோவை பீளமேட்டில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அறையில் இருந்த அவரது லேப்டாப், 2 செல்போன்கள் காணாமல் போனது. அதிகாலை அவரது அறைக்குள் நைசாக புகுந்த மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முகமத் அப்துல்ரகுமான் பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி லேப்டாப் மற்றும் செல்போன்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.