நள்ளிரவில் பைக்குக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் மீது வழக்கு ..!

கோவை குனியமுத்தூர் கரும்புக்கடை பகுதியில் உள்ள ராயல் நகரை சேர்ந்தவர் பீர்முகமது ( வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் நள்ளிரவில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது.இதில் பைக் முழுவதும் எரிந்து நாசமானது.இதுகுறித்து பீர் முகமது குனியமுத்தூர் போலீஸ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட அன்சர் அகமத் (வயது 33) என்பவர் இவரது பைக்குக்கு தீ வைத்தது தெரியவந்தது .இது தொடர்பாக அன்சார் அகமத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.