கோவை ஒப்பணக்கார வீதியில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம் .எந்திரத்தில் இருந்த மோடத்தை இரவில் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்தக் கிளையின் மானேஜர் சியாம் சுந்தர் ,கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா ...
கோவை சூலூர் அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் கோபு (வயது 61). ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. கடந்த மாதம் 17-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். அப்போது கோபு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் வேலையும் கிடைக்கவில்லை. இதன் காரணமான அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று அந்த வழியாக செல்லாண்டி கவுண்டன் புதூரில் இருந்த அரசு பஸ்சை ...
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் .காலனி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தைசேர்ந்த ...
கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் இலங்கை, சிங்கப்பூர் ,சார்ஜா, ஆகிய வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சார்ஜாவிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை 4 மணிக்கு சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டியைப சேர்ந்தவர் முப்பிடாதி(வயது 64)இவர் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவதன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்குசென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போதுஅவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டுஉடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் ...
கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு தணிக்கை செய்ய சென்றவர்களை அரிவாளை காட்டி மிரட்டியதாக மேற்பார்வையாளராக பணியாற்றிய பெரிய கடை வீதியைசேர்ந்த சர்புதீன் ( வயது 51) உட்பட 8பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக்கு ...
ஊட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி கல்லட்டி சாலை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை பாதை ஆகும். இந்த பாதையில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட சுற்றுலா வேன் கவிழந்து ஒருவர் பலியானார். தொடர்ந்து இந்த சாலையில், விபத்துகளும் உயிரிழப்புகளும் நடைபெற்று வந்த நிலையில், இந்த சாலையில் வெளிமாவட்டம் ...
கோவை பீளமேட்டில் உள்ள டாக்டர், ஜெகநாதன் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 77) இவர் தினமும் அந்த பகுதியில் நடைபயிற்சி செய்வார் .நேற்று அங்குள்ள 4 -வது வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் ...
கோவை பக்கம் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி ( வயது 25 )இவர் தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.இது குறித்து சூலூர் போலீசில் ஹரி புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்கள் 2பேரை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் ...