கோவையில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை பறிப்பு..!

கோவை ரத்தினபுரி பி.என்.சாமி காலனியை சேர்ந்தவர் வேலாயுதம்.இவரது மனைவி வசந்தி (வயது 45). கூலி தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கணபதி நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றனர்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பஸ்சில் இருந்து இறங்கினர். பின்னர் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் 3 பவுன் தங்க நகையை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

செல்வபுரம் ராக்கப்பா லே அவுட் பகுதியை சேர்ந்தவர் பூர்ண சந்திரன். இவரது மனைவி விலாசினி (53). சம்பவத்தன்று இவர் அவினாசி ரோட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார்.
அப்போது பஸ் கந்தசாமி லே அவுட் அருகே சென்றபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் விலாசினி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து அவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.