கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். போலீசாரின் விசாரணையில், ஜமேஷா முபின் கோவையில் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டதும், அதில் சிக்கி அவரே இறந்ததும் தெரியவந்தது. மேலும் இதுபோன்று கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 52). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் தனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்து வந்தேன். அப்போது எனக்கு சரவணகுமார், ஜகவர் பிரசாத், மற்றொரு சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகியோர் ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி ,அப்ப நாயக்கன் பாளையம், சுப்பிரமணியம் பாளையம், கவுண்டம்பாளையம் வெள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம், மற்றும் பொருட்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இதை தொடர்ந்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் ...
கோவை உப்பிலிப்பாளையம் வரதராஜபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று அவர் தனது உறவினர் குமார் என்பவருடன் செல்வபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர்கள் சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோவில் அருகே வந்தபோது வாலிபர் ஒருவர் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் திடீரென அந்த வாலிபர் குமாரிடம் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலம் ராஜேஸ்வரி நகரில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து மதுக்கரை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது ...
கோவை குனியமுத்தூர் பிளேக் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (41). இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 3 நாட்களுக்கு முன்பு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ...
ஊட்டி அருகே உள்ள அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலா் ஜெகநாதன் பணி ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றியவா் ஜெகநாதன். இவா் சில மாதங்களுக்கு முன் கோவை தொண்டாமுத்தூரில் இருந்து மாறுதலாகி ஊட்டிக்கு வந்தாா். இந்த நிலையில் நேற்று அவா் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. ...
திருப்பூர் தண்ணீர் பந்தலை சேர்ந்த 29 வயது வாலிபர். இவர் அந்த பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். வாலிபர் ஆனைமலையில் உள்ள தனது தாய் மாமா வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வாலிபர் தனது தாய் மாமன் மகளான பிளஸ்-1 படிக்கும் 16 ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அருள்குமார். இவர் தான் கலெக்டர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறினார். போலியாக அடையாள அட்டை தயார் செய்து வைத்து இருந்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என்று கூறி உள்ளார். யாருக்காவது வேலை மற்றும் இடம் ...
கோவை ஆர். எஸ். புரம். பக்கம் உள்ள கருமலை செட்டிபாளையம். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 55) இவர் நூற்பாலைகளுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார்.இவரது வீட்டில் யாரோ மர்மம் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் ...













