கோவை கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் பறிப்பு – 3 பேர் கைது..!

கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம்,அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் மனோஜ் குமார் ( வயது 21) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம்ஆண்டு படித்து வருகிறார்.இவர் நேற்று அவரது பைக்கில் நண்பருடன் ராம்நகர் வி கே.கே.மேனன் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.நேரு வீதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் இவர்களை வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். மறுக்கவே அவரது இருசக்கர வாகனத்தை பறித்தனர். அப்போது மனோஜ் குமார் அவர்களில் ஒரு கொள்ளையனை மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார் . மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர் .போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர் கோவை ரத்தினபுரி 7-வது வீதியைச் சேர்ந்த தினேஷ் (வயது 23) என்பது தெரிய வந்தது.இவனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ரத்தினபுரி வைஷ்ணவ் (வயது 24) சித்தாபுதூர், ஹரிபுரம், சிங்காரன் (வயது 21)ஆகியோரும் கைது செய்யப்பட்டனர் .கத்தியும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.