கோவையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது..!

கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா நேற்று மாலை தெற்கு உக்கடம், புல்லுக்காடு. ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள கழிவு நீர் பண்ணை அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .

இது தொடர்பாக தெற்கு உக்கடம், ஜி. எம். நகரை சேர்ந்த முகமது நவாஸ் என்ற பாம்பு ( வயது 23) கோட்டைமேடு, வின்சென்ட் ரோட்டை சேர்ந்த தாரிக் என்ற முகமது தாரிக் ( வயது 20) புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற அப்பல்லோ கார்த்திக் ( வயது 24) குனியமுத்தூர் வசந்த் நகரை சேர்ந்த அல்மனார் (வயது 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து போதை ஊசியும், மாத்திரைகளும் 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் தாரிக் என்ற முகமது தாரிக் மீது ஏற்கனவே போதை மாத்திரை விற்ற வழக்கு உள்ளது..