கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே சி.எம்.சி.காலனியில் துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை ஆய்வு செய்வதற்காக கோவை மத்திய மண்டல மாநகராட்சி உதவி கமிஷனர் கனகராஜ் குழுவுடன் நேற்று சென்றார் அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் முன் ரவி என்பவர் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார் .இதை அகற்றும் போது ரவி உதவி கமிஷனர் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 67 )மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நஞ்சப்பா நகர் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சொகுசு காரில் வந்த 4பேர் இவரை கடத்திச் சென்று அவரது பெயர் மற்றும் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். பின்னர் ...
கோவை அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 46) கட்டுமான தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று தனது உறவினரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பெயிண்ட் கடைக்கு சென்றார். அவரது பைக்கில் பணம் ரூ 52 500 மற்றும் பேங்க் லாக்கர் சாவி ஆகியவற்றை ஒரு பையில் ...
திமுக எம்.பி.க்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றம்..!
திமுக எம்பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு எதிரான முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் திமுக எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலை, பண்ருட்டி அருகே பனிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த ஆலையில் பணிபுரிந்த, பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, ...
கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் பகுதியை சேர்ந்தவர 16-வயது சிறுமி. இவரை திடிரென்று காணவில்லை.. இது குறித்து சிறுமியின் தாயார் சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்தியது குனியமுத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் குரு பிரசாத் (வயது 19) என்பது தெரியவந்தது. ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆண்டவர் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக அரிசி கடத்தல் நடைபெறுவதாக சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மொஃபட் வாகனத்தில் ...
கோவை குனியமுத்தூர் எம். எஸ் .பார்க் அவென்யூவை சேர்ந்தவர் மனோபாலன் ( வயது 33) இவருக்கு இடையர்பாளையம் தடாகம் ரோட்டில் உள்ள பெரியண்ணன் நகரைச் சேர்ந்த பிரபாகரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் வேலாண்டிபாளையம் இடையர்பாளையம் ரஹீம் நகரை சேர்ந்த புரோக்கர் பன்னீர்செல்வம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.இவர்கள் 3 பேரும் சேர்ந்து 8 சென்ட் ...
கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் நேற்று இரவு போத்தனூர் சாய் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டாங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 171 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகன் விக்னேஷ் ( வயது 29 )இவர் டாக்டர் பாலசுந்தரம் ரோடு- பாரதியார் ரோடு சந்திப்பில் தள்ளு வண்டியில் டிபன் கடை-சிக்கன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது பைக்கில் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் சிக்கன் வாங்குவதற்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2பேர் இவரை ...
கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது பெண்.இவருக்கு 4- 11 -2020 அன்று திருமணம் நடந்தது .2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர் கார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவர் மாமனார் ,மாமியார், சகோதரர் ஆகியோர் இவரிடம் கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் தொடங்குவதற்கு பெற்றோரிடம் பணம் ...













