வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக் பறிப்பு – 2 பேர் கைது..!

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மகன் விக்னேஷ் ( வயது 29 )இவர் டாக்டர் பாலசுந்தரம் ரோடு- பாரதியார் ரோடு சந்திப்பில் தள்ளு வண்டியில் டிபன் கடை-சிக்கன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் தனது பைக்கில் பாப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் சிக்கன் வாங்குவதற்கு சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2பேர் இவரை கத்தியை காட்டி மிரட்டி வழிமறித்து அவரது பைக்கை பறித்துச் சென்று விட்டனர் .இது குறித்து விக்னேஷ் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்த இந்திரஜித் (வயது 27) விருதுநகர் , பாண்டியன் நகரை சேர்ந்த அழகுவேலன் என்ற வேலு பிரபாகரன் (வயது 32) ஆகியோரை கைது செய்தனர் .இவரிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு ஒரு 2 லட்சம் இருக்கும்.இவர்கள் இருவரும் டிரைவராக வேலை பார்த்து வந்தனர்.இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன 2 பேரும் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்