அரசு நிலத்தை விற்று ரூ.44 லட்சம் மோசடி- 3 பேர் மீது வழக்கு..!

கோவை குனியமுத்தூர் எம். எஸ் .பார்க் அவென்யூவை சேர்ந்தவர் மனோபாலன் ( வயது 33) இவருக்கு இடையர்பாளையம் தடாகம் ரோட்டில் உள்ள பெரியண்ணன் நகரைச் சேர்ந்த பிரபாகரன் அவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோர் வேலாண்டிபாளையம் இடையர்பாளையம் ரஹீம் நகரை சேர்ந்த புரோக்கர் பன்னீர்செல்வம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தனர்.இவர்கள் 3 பேரும் சேர்ந்து 8 சென்ட் 12 சதுர அடி கொண்ட குழந்தைகள் பூங்காவை (ரிசர்வ் சைட்) போலி ஆவணங்கள் தயாரித்து ரூ 44 லட்சத்துக்கு மனோ பாலனுக்கு விற்று விட்டனர்.பின்னர் தான் இது ரிசர்வ் சைட் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் புவனேஸ்வரி அவரது கணவர் பிரபாகரன் புரோக்கர் பன்னீர்செல்வம், ஆகியோர் மீது மோசடி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..