பைக்கில் வைத்திருந்த பணம் திருட்டு – மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை அருகே உள்ள சின்ன மேட்டுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 46) கட்டுமான தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று தனது உறவினரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு பெயிண்ட் கடைக்கு சென்றார். அவரது பைக்கில் பணம் ரூ 52 500 மற்றும் பேங்க் லாக்கர் சாவி ஆகியவற்றை ஒரு பையில் வைத்து தொங்க விட்டிருந்தார்.சிறிது நேரம் கழித்துப் பார்க்கும்போது அந்த பையை காணவில்லை. அதில்ரு 52,500 பணமும் வங்கி லாக்கர் சாவியும் இருந்தது. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து கதிர்வேல் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..