ஆள்மாறாட்டத்தில் முதியவர் காரில் கடத்தல் – 4 பேர் மீது போலீசில் புகார்..!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் மனோகரன் ( வயது 67 )மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார் இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நஞ்சப்பா நகர் அருகே நின்று கொண்டிருந்தார் அப்போது சொகுசு காரில் வந்த 4பேர் இவரை கடத்திச் சென்று அவரது பெயர் மற்றும் ஆதார் கார்டை கேட்டுள்ளனர். பின்னர் அவரிடம் கந்தசாமி என்பவரை கடத்துவதற்கு பதிலாக தங்களை தவறுதலாக கடத்தி வந்து விட்டோம் என்று கூறி இறக்கி விட்டு சென்றனர்.இதுகுறித்து முதியவர் மனோகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சொகுசு காரில் வந்த 4 பேரை தேடி வருகிறார்கள்..