கோவையில் 171 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் நேற்று இரவு போத்தனூர் சாய் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டாங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 171 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பிள்ளையார்புரம் நாகராஜபுரம் .காந்திநகரை சேர்ந்த சவுகத் அலி (வயது 38 )என்பது தெரிய வந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது..