வரதட்சணை கொடுமை… மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டல் – கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு.!!

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது பெண்.இவருக்கு 4- 11 -2020 அன்று திருமணம் நடந்தது .2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர் கார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவர் மாமனார் ,மாமியார், சகோதரர் ஆகியோர் இவரிடம் கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் தொடங்குவதற்கு பெற்றோரிடம் பணம் வாங்கி வருமாறு கேட்டு மிரட்டினார்களாம். பின்னர் அவரது கணவர் இயற்கைக்கு மாறாக உடலுறவுக்கு  அழைத்தாராம். அதை மனைவி மறுத்தார். இதனால் அவரை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினாராம் .இது குறித்து அவரது மனைவி கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் கணவர், மாமனார், மாமியார் உட்பட 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஐ .டி .சட்டம் கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை ஆகிய 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.