மகனை சுத்தியலால் அடித்த தந்தை மீது வழக்கு..! 

மகனை சுத்தியலால் அடித்த தந்தை மீது வழக்கு..!  கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ஜோதி. இவர்கள் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் ஜோதி வீட்டில் இருந்த போதுகோவிந்தன் குடிபோதையில் அங்கு வந்தார். இதை அவரது மகன் பிரவீன் (வயது 16) கண்டித்தார் .இதனால் அவர்களுக்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தந்தை கோவிந்தன் மகன் பிரவினை சுத்தியலால் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது: சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சிறுவனை சுத்தியலால் தாக்கிய தந்தை கோவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.