கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் திடீர் மாயம்..! 

கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் திடீர் மாயம்..!  கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் 10 -வது வீதியை சேர்ந்தவர் சுரேஷ்.டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீமதி ( வயது 19) பிளஸ் 2 படித்து முடித்துள்ளார்,இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தந்தை சுரேஷ் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். விசாரணையில் அவர் கடந்த 2 ஆண்டுகளாக பெரியார் நகரை சேர்ந்தஒரு வாலிபரிடம்பழகி வந்ததாக தெரியவந்தது..அவருடன் எங்கோ மாயமாகி இருப்பதாக சந்தேகிக்க படுகிறது. இதேபோல கோவை சொக்கம்புதூர் ஜீவா பாதையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகள் பாரதி ( வயது 19)பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் 13ஆம் தேதி வீட்டில் இருந்துதிடீரென்று மாயமாகிவிட்டார்.இதுகுறித்து தாயார் ஜான்சிராணி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம், சுந்தர கவுண்டர் வீதியை சேர்ந்தவர் கோபால் அவரது மகள் சுமித்ரா (வயது 19) கோவை சுங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரி பி.ஏ 3-ம்ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தாயார் விஜயலட்சுமி போத்தனூர் போலீசில்புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.கோவையில் ஒரே நாளில் 3 மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..