மாட்டுவண்டி திருட்டு- 2 பேர் மீது புகார்

மாட்டுவண்டி திருட்டு- 2 பேர் மீது புகார் ..!  கோவை அருகே உள்ள சுண்டக்கா முத்தூர் மட்டசாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 37)சொந்தமாக மாட்டு வண்டி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று மாட்டு வண்டியை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மாட்டு வண்டியை காணவில்லை. 2 பேர் திருடி சென்று கொண்டிருந்தனர்.அவர்களை கையும் களவுமாக பிடித்து செல்வபுரம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து கிருஷ்ணகிரி சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது.அவரிடம் விசாரணை நடந்து வருகிறது..