ஸ்கூட்டர் மீது கார் மோதல்: கணவர் பலி- மனைவி படுகாயம்..

கோவையை அருகே உள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 62) அங்குள்ள பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் தனது மனைவி சாந்தியுடன் ஸ்கூட்டரில் சிங்கையன் புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர் .வேலுச்சாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.அவரது மனைவி சாந்தி படுகாயத்துடன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.