கார் மோதி பெண் பரிதாப பலி..

கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பழனியம்மாள் ( வயது 51) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு செல்வதற்காக ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து காருண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.