ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நைசாக நகை திருடிய பெண்கையும் களவுமாக பிடித்த சக பயணிகள்..!

கோவை துடியலூர் என்ஜி ஜி.ஓ காலனி பக்கமுள்ள துரைராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் பிரபு . இவரது மனைவி சந்திர பிரபா, இவர் ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று டவுண் பஸ்சில் பயணம் செய்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார் .அப்போது இவரது கழுத்தில் கடந்த 16 கிராம் தங்க செயினை ஒரு பெண் நைசாக திருடினார். அவரை சந்திரபிரபா,மற்ற பயணிகள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து ஆர் எஸ் புரம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில்  அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள பெத்தநாயக்கன்பட்டி நரிக்குறவர் காலனி சேர்ந்த வடிவேல் மனைவி சத்யா ( வயது 32) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது.