பவானி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி பரிதாப பலி..

கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரி துரை. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் . இவரது மகன்கள் அகிலேஷ் குமார் (வயது 10) அபினேஷ் குமார் (வயது 8) இருவரும் கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5 – ம் வகுப்பு 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தனது தாயார் முத்துலட்சுமியுடன் சிறுமுகை திம்மராயன் பாளையத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு வந்தனர். நேற்று அவர்களது பாட்டி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றார் . அப்போது அவருடன் அகிலேஷ், குமாரும் அபினேஷ் குமாரும் சென்றனர். அவர்கள் தண்ணீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்து தாயார் முத்துலட்சுமி (வயது 28) சிறுமுகை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..