மூதாட் டி திடீர் மாயம்..

புத்தாண்டு தினத்தில் சர்ச்சுக்கு சென்ற மூதாட்டி திடீர் மாயம். கோவை ஜன 3 கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள தாளத்துறையைச் சேர்ந்தவர் ராமன், இவரது மனைவி மலர் (வயது 60 ) இவர் 31 ஆம் தேதி இரவுபுத்தாண்டு பிராத்தனைக்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது மகள் மனோகரி சிறுமுகை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.