கோவையில் கொரோனாவுக்கு முதியவர் பலி…

கோவை புலியகுளத்தைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரின் சளி மாதிரியை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியதில் அந்த பெண்ணிற்கு ஜே.என். 1 என்ற புதிய வகை கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து அவர் குணமடைந்து வீடு திரும்பினார் .இந்த நிலையில் கோவையில் 74 வயது முதியவர் கடந்த 27ஆம் தேதி ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .அவனா டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அந்த முதியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது .இதை யடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று அவர்சிகிச்சை பலன்அளிக்காமல் இறந்தார் .இவருடன் சேர்த்து கோவையில் இதுவரை 2,621 பேர் கொரானவால் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவரோடு கோவையில் கொரோனா பாதித்த10 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..