இன்ஜினியர் வீட்டில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு …

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 53)இவரது மூத்த அண்ணன் மருதமலை அடிவாரம் ஐ.ஓ.பி .காலனி முதல் வீதியில் வீடு கட்டியுள்ளார்.அவர் தற்போது உக்ரேனில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் கோவைக்கு வந்து அந்த வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் உக்ரேன் புறப்பட்டு சென்றார்..இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 2 கிலோ வெள்ளி பூஜை சாமான்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அவரது தம்பி ஆனந்தன் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.