ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம்..!

கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக ஈரோடு லயன்ஸ் கிளப்புடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜேந்திரன்‌ முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. கௌதம் முகாமில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு. கிருஷ்ணகுமார் இரத்த தானம் செய்ய தன்னார்வலர்களை தயார்படுத்தி வைத்திருந்தார்.

முதலாவதாக மேலாண்மைத்துறை தலைவர் முனைவர். இராஜசேகர் இரத்த தானம் செய்தார்.
பின்னர் கல்லூரியில் உள்ள மாணவ தன்னார்வலர்கள் 90 பேர் இந்த இரத்த தான முகாமில் பங்கு கொண்டு தங்களுடைய இரத்தங்களை தானம் செய்தனர். இந்த இரத்த தான முகாமினை உதவிப் பேராசிரியர் திரு. அஜித்குமார், செல்வி. காயத்ரி ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.