அரசு பஸ் மோதி வடமாநில தொழிலாளி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள கெம்பனூரில் இருந்து தடாகம் ரோடு வழியாக காந்திபுரத்துக்கு நேற்று அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அங்குள்ள முத்தண்ணன்குளம்,தண்டு மாரியம்மன் கோவில் சந்திப்பில் திரும்பும் போது ரோடு ஒர தடுப்புச் சுவரில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒருவர் மீது அந்த பஸ் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசராணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கூலிதொழிலாளி சுக்தேவ் மஞ்ஜி (வயது54) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மதுக்கரை குரும்பபாளையத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கௌரிசங்கர் ( வயது 46 )என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.