இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தமைக்காக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரின் சகோதரரும் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்பட இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டமைக்காக கனடா நாட்டுக்குள் இவர்கள் 4 பேரும் நுழையத் ...
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா ...
சென்னை : தி.மு.க., அரசை எதிர்த்து, தொடர் போராட்டங்களை ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கைகள், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம் பெற்றன. தேர்தலிலும் தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், தி.மு.க., ஆட்சி வந்ததும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். பழைய ...
பொங்கல் அன்று பூமியில் விழப்போகும் செயற்கைக்கோள் பற்றிய அதிர்ச்சி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அனுப்பிய செயற்கை கோள்களின் ஆயுள் முடிந்து விட்டது. அதன் எடை 2450 கிலோ. ஜனவரி 15ஆம் தேதி அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் பூமியில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது. சுற்று பாதையில் இருந்து ...
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாக்குதல் நடத்துவதற்காக காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ...
கோவை: பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டப்படுகிறது. பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு கொண்டாடுவதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை,தேனி மற்றும் தென் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார்.நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினார்கள். அப்போது சூலூர் அரசூர் பிரிவு அருகே கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷாம்பு (வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதே போல துடியலூர் அருகே ...
கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் ஷிபானா (வயது 23). திருநங்கையான இவர் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன், அவரது மகன் ராமன் ஆகியோர் ஷிபானாவின் பாலினம் குறித்து பேசி அவரை தொந்தரவு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று அவர் சென்ற போது பாலினம் குறித்து தகாத வார்த்தைகளால் ...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் மற்றும் கோட்டயம் பகுதியில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு ...
கோவை மாநகராட்சியில் புகையில்லா போகியை கொண்டாடும் வகையில் 30 இடங்களில் இன்று முதல் குப்பைகள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- போகி பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகியை கடைப்பிடிக்கும் வகையிலும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருள்களை தீ வைத்து எரிப்பதைத் தவிா்ப்பதற்காக, மாநகராட்சியில் ...













