கோவை இளம் திருநங்கை மீது தாக்குதல் – தந்தை,மகன் மீது வழக்கு..!

கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் ஷிபானா (வயது 23). திருநங்கையான இவர் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன், அவரது மகன் ராமன் ஆகியோர் ஷிபானாவின் பாலினம் குறித்து பேசி அவரை தொந்தரவு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று அவர் சென்ற போது பாலினம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசினர். இதனையடுத்து ஷிபான அவர்களிடம் சென்று கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து அவரை தாக்கினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த ஷிபானை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் திருங்கையை தாக்கிய தந்தை மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.