புகையில்லா போகி… கோவை மக்களிடம் குப்பைகள் பெற 30 இடங்கள் அறிவிப்பு..!

கோவை மாநகராட்சியில் புகையில்லா போகியை கொண்டாடும் வகையில் 30 இடங்களில் இன்று முதல் குப்பைகள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போகி பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகியை கடைப்பிடிக்கும் வகையிலும் மக்கள் தங்கள் வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருள்களை தீ வைத்து எரிப்பதைத் தவிா்ப்பதற்காக, மாநகராட்சியில் உள்ள 5 மண்டலத்துக்குள்பட்ட 30 இடங்களில் உபயோகமற்ற பொருள்களைப் பெறுவதற்கு இன்று முதல் 14-ந் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கண்ட இடங்களில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் மக்கள் தேவையற்ற பொருள்களை வழங்கலாம்.

கிழக்கு மண்டலத்தில் சிட்ரா காா்னா், காளப்பட்டு நான்கு சாலை, சந்திர காந்தி நகா் சுகாதார ஆய்வாளா் அலுவலகம், வரதராஜபுரம், சிங்காநல்லூா் பஸ் நிலையம், சிங்காநல்லூா் உழவா் சந்தையும், மேற்கு மண்டலத்தில் பனைமரத்தூா் குப்பை மறுசுழற்சி மையம், வடவள்ளி சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம், ஆா்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானம், கவுண்டம்பாளையம் சுகாதார ஆய்வாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் வழங்கலாம்.

வடக்கு மண்டலத்தில் துடியலூா் சந்தை, நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையம், சரவணம்பட்டி சுகாதார ஆய்வாளா் அலுவலகம், சின்னவேடம்பட்டி சுகாதார ஆய்வாளா் அலுவலகம், கே.ஆா்.ஜி.நகா், கணபதி சுகாதார ஆய்வாளா் அலுவலகம், ராமசாமி நகா், நுண்ணுயிா் உரம் தயாரிப்பு மையம் மற்றும் கவுண்டம்பாளையம் வாா்டு அலுவலகத்தில் பெறப்படும்.
தெற்கு மண்டலத்தில் சொக்கம்புதூா் குப்பை மறுசுழற்சி மையம், புல்லுக்காடு குப்பை மறுசுழற்சி மையம், கோவைப்புதூா் சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம், கணேசபுரம் தருண் ரெசிடென்சி ஆகிய இடங்கள்.

மத்திய மண்டலத்தில் காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கிராஸ்கட் சாலை சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம், தியாகி குமரன் மாா்க்கெட், உக்கடம் மாா்க்கெட், ராஜவீதி தோ்த்திடல், செட்டிவீதி, உக்கடம் பஸ் நிலையம், ரேஸ்கோா்ஸ் சுகாதார ஆய்வாளா் வாா்டு அலுவலகம் , ெரயில் நிலையம் அருகில் உள்ளிட்ட இடங்களில், போகி குப்பை வாங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.