அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல்:  அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட வாடகை கடைகளில் பல கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவிற்கிணங்க வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி ...

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி செல்வதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கோவை அவிநாசி ரோட்டில் 4 பிரிவுகளாக நின்று அதிவேகமாக பைக்கில் செல்பவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 80 இளைஞர்கள் அதிவேகமாக சென்றதாக பிடிபட்டனர்.இவர்களுக்கு போலீஸ் ...

கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ...

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் (வயது73) இவரது மனைவி டாக்டர் பிரிசில்லா ( வயது 73 )இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்கள். தற்போது தாராபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சென்று விட்டு கோவைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காரை டாக்டர் ...

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் சரவணக்குமார் ( வயது 23 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். சரவணகுமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் .அப்போது இரவு 11 மணி அளவில் ஒரு கும்பல் அவரது ...

கோவையை அடுத்த மதுக்கரை, மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் ( வயது 23) இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .அப்போது அந்த சிறுமி தனக்கு 40 வயது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து ஏற்பாடு நடைபெற்று வருவதாக மதன் ...

கோவை சுந்தராபுரம், ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் .இவரது மனைவி மணிமேகலை ( வயது 38) கூலி தொழிலாளி. இவர் ஜி.டி.டாங்க் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் முருகன் ( வயது 30) என்பவரிடம் 25- 6- 22 அன்று ரூ. 25 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். மாதம் ரூ. 7500 கொடுத்து ...

கோவையில் உள்ள டாக்டர். நஞ்சப்பா ரோட்டில் மத்திய சிறை உள்ளது.இந்த சிறையின் நுழைவு வாசல் அருகே நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 55 வயது இருக்கும். அவர் யார் ?என்று அடையாளம் தெரியவில்லை .இது குறித்து புலியகுளம் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் ...

கோவை: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கடு (வயது 38 )இவர் ஈச்சனாரி கணேசபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று இவர் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோடு குளக்கரையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்து 2 ஆசாமிகள் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ 5 ஆயிரம் பணம், செல்போன் ...

கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அழகம்மாள் (வயது 60). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக சத்தியமூர்த்தி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க ...