கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல்- பைனான்ஸ் அதிபர் கைது

கோவை சுந்தராபுரம், ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் .இவரது மனைவி மணிமேகலை ( வயது 38) கூலி தொழிலாளி. இவர் ஜி.டி.டாங்க் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் முருகன் ( வயது 30) என்பவரிடம் 25- 6- 22 அன்று ரூ. 25 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். மாதம் ரூ. 7500 கொடுத்து வந்தார் .இதுவரை ரூ. 45 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் முருகன் அவரது மனைவி உதயகலா ( வயது 30) ஆகியோர் மேலும் அதிக வட்டியும் , பணமும் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து மணிமேகலை போத்தனூர் போலீசில்  புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து பைனான்ஸ் அதிபர் முருகனை நேற்று கைது செய்தனர். அவரது மனைவி உதய கலாவை தேடி வருகிறார்கள்.இவர் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.