17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை..!

கோவையை அடுத்த மதுக்கரை, மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் ( வயது 23) இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .அப்போது அந்த சிறுமி தனக்கு 40 வயது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து ஏற்பாடு நடைபெற்று வருவதாக மதன் குமாரிடம் கூறியுள்ளார். உடனே அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 18- 8- 20 20 அன்று மதன் குமார சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது சென்று ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவர் சிறுமியை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார் .இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினார் .ஆனால் சிறுமி கிடைக்கவில்லை .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர் .இந்த நிலையில் சிறுமியை கடத்திய மதன் குமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர் .சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் .இந்த வழக்கு கோவை மத்திய பகுதி அனைத்து பெண்கள் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போக்சோ சட்டத்தில் மதன்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் .இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் காட்டப்பட்ட மதன் குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனை விதிக்கப்பட்ட மதன் குமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.